Monday, November 29, 2010

சிறுவர் உரிமைகள் சாசனத்தை நாடுகள் நடைமுறைப்படுத்தும் முறைகள்

சிறுவர் உரிமைகள் உடன்படிக்கையானது அரசுகள் தேசிய மட்டங்களில் பிள்ளைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் அங்கீகரிப்பதற்குமான வழிமுறைகளை உருவாக்கியமை  குறிப்பிடத்தக்க விடயமாகும்.
     அவ்வகையில் இன்று குறைந்தது 22 நாடுகள் சிறுவர் உரிமைகளினைத் தமது அரசியலமைப்புக்களில் சேர்த்துக்கொண்டுள்ளன. இவற்றில் பிறேசில், ஈக்வடோர், எதியோப்பியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளும் உள்ளடங்குகின்றமை முக்கிய அம்சமாகும்.
      இதனோடு 50 இற்கும் அதிகமான நாடுகள் இவ் உடன்படிக்கையின் ஏற்பாடுகளுடன் ஒத்தியல்பை உறுதிப்படுத்துவதற்கு சட்ட மீளாய்வு செயல்முறையொன்றினைக் கொண்டுள்ளன.

     பொலிவியா, பிறேசில், நிக்கரகுவா போன்ற நாடுகள் பிள்ளைகளினதும் வளரினம் பருவத்தினரினதும் உரிமைகள் தொடர்பான ஒழுக்கக் கோவையொன்று கைக்கொள்ளப்படுதலை ஊக்குவித்துள்ளன.
    இவற்றுடன் ஏனைய நாடுகள் சட்டவாக்க மாற்றங்கள் தேவைப்படுகின்ற பரப்புக்களில் மாற்றங்களினை ஏற்படுத்தியுள்ளன. அவ்வாறான மாற்றங்களும் நாடுகளும் பின்வருமாறு:

சிறுவர் ஊழியம்                                         : இந்தியா, பாக்கிஸ்தான், போர்த்துக்கல்
பாலியல் சுரண்டலிலிருந்து பாதுகாப்பு    : அவுஸ்ரேலியா, பெல்ஜியம், ஜேர்மனி, சுவீடன்,தாய்லாந்து
இளம்பருவத்தினர் நீதி                                : பிறேசில், கொஸ்ராரிக்கா, எல்சல்வடோர்

நாடுகளுக்கிடையிலான சுவீகாரம்            : பராகுவே, ருமேனியா, ஐக்கிய இராச்சியம்

மேற்கூறியவற்றுடன் சில நாடுகள் குறித்த நடத்தையில் மாற்றங்களை ஊக்கவிப்பதற்கும், உடன்படிக்கையின் சரத்துக்களுடனும், ஏற்பாடுகளுடனும் ஒத்தியலாத பழக்கங்களை தடை செய்வதற்கும் முக்கியமான சட்டவாக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
உதாரணம் :
    பாடசாலைகளிலும், குடும்பத்திலும் பிள்ளைகளுக்கு உடல் சார்ந்த தண்டனையை தடை செய்தலினை ஆஸ்திரியா, சைப்பிரஸ், ஸ்கன்டினேவிய நாடுகள் போன்றன நடைமுறைப்படுத்தியுள்ளன.

No comments:

Post a Comment